search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cbi summon"

    குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #MinisterVijayabaskar #gutkhaissue
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள். இருவரிடமும் தலா 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். 

    இப்போது குட்கா ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  #MinisterVijayabaskar #gutkhaissue
    குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதையடுத்து இன்று அவர் விசாரணைக்காக ஆஜராக உள்ளார். #GutkhaScam #CBI
    சென்னை:

    குட்கா ஊழல் வழக்கில் செங்குன்றத்தில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. உதவி கமி‌ஷனர் மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.

    இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கும் சி.பி.ஐ. நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இதனை ஏற்று அவர் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

    அப்போது குட்கா விவகாரம் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின்போது ஜெயக்குமார் தனக்கு தெரிந்த தகவல்களை சி.பி.ஐ.யிடம் தெரிவிக்க உள்ளார்.

    செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் சூப்பிரண்டு ஜெயக்குமார், சென்னையில் பணியாற்றிய போது சோதனை நடத்தியவர். இவர்தான் குட்கா குடோனை கண்டுபிடித்து செங்குன்றம் போலீசிடம் ஒப்படைத்தார். இதன்பிறகே குட்கா விவகாரத்தில லஞ்ச புகார் கூறப்பட்டுள்ளது. முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ஜெயக்குமார் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

    குட்கா விவகாரம் தொடர்பாக ஜெயக்குமாருக்கு பல தகவல்கள் தெரியும் என்று அவர் கூறியிருந்ததன் அடிப்படையில்தான் ஜெயக்குமாருக்கு இப்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



    போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டியபோது அளித்த பேட்டியில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

    சி.பி.ஐ. விசாரணையின் போது ஜெயக்குமார் சோதனை தொடர்பான தகவல்களையும், தனது விளக்கத்தையும் அளிக்க உள்ளார். #GutkhaScam #CBI

    ×