search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green algae"

    • தஞ்சாவூர் வட்டாரத்தில் சுமார் 26000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் வட்டாரத்தில் சுமார் 26000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தூர்கட்டும் பருவத்தில் உள்ளது. தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சாகுபடி செய்துள்ள குறுவை நெல் வயலில் பச்சைப் பாசி வளர்ந்து காணப்படுகிறது.

    இது பின்னர் பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும் மாறி வேர்ப்பகுதியில் காற்றோட்டத்தையும் சூரிய வெளிச்சத்தையும் தடுத்து கட்டுப்படுத்தும்.

    இதனால் வேரின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சத்துக்களை எடுக்க இயலாத நிலை ஏற்படும். நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறும்.

    தீவிர பாதிப்பு நிலையில் பயிர்கள் காயத் துவங்கும். களர் உவர் தன்மை அதிகம் கொண்ட நிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படும்.

    இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ மயில்துத்தத்தை (காப்பர் சல்பேட்) நான்கு தூளாக்கி 10 கிலோ மணலுடன் கலந்து கோணிப் பையில் இட்டு கட்டி, பாசன வாய்க்கால் வாய் மடையில் வைத்து, தண்ணீர் கோணிப்பையில் பட்டு, கரைந்து வயலுக்குள் செல்லுமாறு செய்ய வேண்டும்.

    மேலும், இரண்டு நாள் கழித்து நீரை வடித்து, அதனைத் தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

    குறுவை அறுவடை முடிந்தவுடன் தாளடி சாகுபடிக்கு முன்பு சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் களர் உவர் தன்மையை, மாற்றி சமநிலையை ஏற்படுத்துவதால் பச்சைப்பாசியின் தாக்குதலை நன்கு கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு என பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும்.
    • பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) கேத்தனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் வரவேற்புரை ஆற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் அறிவியல் நிலையம் பேராசிரியை கமல சுந்தரி கலந்துகொண்டு அறுவடைக்குப்பின் செய்யும் தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

    விளைவித்த பயிர்களை முழு தானியங்களாக விற்பதன் மூலம் கிடைக்க கூடிய லாபம் குறைவு தான். இதுவே விளைவித்த பயிர்களை மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். உதாரணமாக நமது பகுதியில் பிரதான பயிரான நெல்லை அனைத்து விவசாயிகளும் பயிர் செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். இதனால் லாபம் கிடைத்தாலும் பயிர் செய்த பருவங்களை மட்டுமே வருமானம் கிடைக்கும். இதுவே நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு, இப்படி பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும். பயறு வகை பயிர்களான உளுந்து,பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.

    பெருநகரங்களில் முருங்கைக்கீரை போன்ற கிராமங்களில் விளையக் கூடிய பொருள்கள் கிடைப்பது அரிது. அதை நிறம் மற்றும் தரம் குறையாமல் பதப்படுத்தி விற்கலாம். இது போன்று அனைத்து பயிர்களிலும் அறுவடைக்குப்பின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றலாம். விவசாயிகளாகிய நீங்களும் புதிய தொழில் முனைவோராக மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கேத்தனூர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் மோகன்ராஜ் விவசாயிகளுக்கு நெல் மற்றும் இதர பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை பற்றி எடுத்து கூறினார். மேலும் ஆலங்குடி வேளாண்மை உதவி அலுவலர் சப்தகிரி வாசன் உடன் இருந்தார். பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா நன்றியுரை கூறி நிறைவு செய்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் செய்திருந்தார்.

    ×