search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grandparents"

    • முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    • ‘ஹெல்பேஜ்’ இந்தியா அமைப்பின் மூலம் முதியோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    கடந்த கால நினைவுகள் என்பது நடந்தது. அது எளிதாக மனதில் வந்து நிழலாடும். மகிழ்வை தரும்.

    நடக்கப் போகும் நினைவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது முதுமை. அது இளமையை போல் இனிமையாக இருக்காது என்பதன் அடையாளங்களாக நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் முதியவர்கள்.

    நமக்கும் நாளை முதுமை வரும் இப்படி ஒரு நிலமை வரும் என்ற நினைப்பு இல்லாமல் பெற்ற பிள்ளைகள், சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டவர்கள் பலர் முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    குடும்பம் கைவிட்டாலும், சமூகம் கைவிடவில்லை என்பதன் அடையாளமாக சர்வதேச முதியோர் தினமான இன்று 'ஹெல்பேஜ்' இந்தியா அமைப்பின் மூலம் முதி யோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    இதில் சென்னையின் பல்வேறு இல்லங்களில் பராமரிக்கப்படும் 500 தாத்தா-பாட்டிகள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் புத்தாடைகள் அணிந்து முகத்தில் கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அரங்கத்தில் அமர்ந்து இருந்தார்கள்.

    இந்த காலத்தில் அறுபதை தாண்டுவதே பெரும்பாடு என்ற நிலையில் தொண்ணூறை கடந்தும் நம்பிக்கையோடு பல தாத்தா-பாட்டிகள் நடந்து வந்தார்கள். அவர்களில் 5 பேரை தேர்வு செய்து விழாக் குழுவினர் கவுரவித்துள்ளார்கள்.

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தாத்தா-பாட்டிகளின் நடன நிகழ்ச்சியும், ஆடை அலங்கார போட்டியும் நடந்தது.

    பாட்டி நீ இந்த வயசுலேயும் இப்படி ஆடி கலக்குறியே... இளமையில் எப்படி கலக்கி இருப்பாய்? என்று பார்வையாளர் கைகளால் திருஷ்டி சுற்றி விரல்களால் தலையில் சொடுக்கி கொண்டார்கள்.

    எத்தனை ஆசைகள்.. எத்தனை எத்தனை கனவுகள்... அத்தனையும் கலைந்து போய் இல்லங்களில் தஞ்சமடைந்து இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தியதும் உற்சாகமாகிவிட்டார்கள்.

    தங்களை மகிழ்வித்தவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள்.

    சித்தாந்தம் 97 வயது தாத்தா! ராஜா உடையில் ராஜா மாதிரி கம்பீரமாக மேடையில் தோன்றினார். அவர் அருகில் பசிந்தா மேரி 94 வயதான இந்த பாட்டி ராணியின் ராஜ உடையுடன் ராணி போல் நின்றார்.

    வாவ்... தாத்தா... வாவ் பாட்டி என்று அரங்கில் திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் எழுப்பிய விசில் சத்தம் அரங்கையே தெறிக்கவிட்டது.

    தொலைத்துவிட்ட மகிழ்ச்சியை மீட்டெடுத்த உணர்வுடன் நெகிழ்ந்த அவர்களின் குழி விழுந்த கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீர் வெடித்து சிதறிய விளை நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல் கன்னத்து சுருக்கங்களில் அங்கும் இங்குமாக உருண்டோடியது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹெல்பேஜ் இந்தியா அமைப்பின் இயக்குனர் எட்வின்பாபு செய்து இருந்தார்.

    • மதுரை முதியோர் இல்ல தாத்தா, பாட்டிகள் நடனமாடி இன்ஸ்டாகிராமில் சாதித்த வீடியோ வெளியானது.
    • பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

    மதுரை

    கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால் சிற–கொடிந்த பறவைகளை போன்று தங்களது கடைசி காலத்தை கழிக்க போராடும் மூத்த குடிமக்களுக்காக உருவானதுதான் முதியோர் இல்லங்கள். பிள்ளைகள் இருந்தும் பல்வேறு கார–ணங்களுக்காக தனித்தும், துரத்தியும் விடப்படுப–வர் களை கண்டறிந்து அவர்க–ளின் வாழ்க்கையை இனி–தாக்கும் முயற்சியில் தொடங்கப்பட்ட முதியோர் இல்லங்கள் இன்று எண் ணில–டங்காமல் முளைத்து–விட்டது.

    ஒத்த வயதுடையவர்களை உறவினர்களாக நினைத்து வாழ்வின் இறுதி நாட்களை கழித்துவரும் முதியோர் களும் நாகரீகத்திற்கேற்ப தங்களை மாற்றி வருகிறார் கள் என்பதற்கு சமூக ஊட–கங்களே சாட்சி.

    எத்தனை நாளைக்குத் தான் வரலாற்று கதைகளை நினைவு கூர்ந்து, அனுபவ்ட களை பகிர்ந்து–கொண்டு காலத்தை கடத்துவது? காலத்தின் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முதியோர்களும் தயாராகி–விட்டனர் என்பதற்கு மதுரை முதியோர் இல்லமும் சான்றாக அமைந்துள்ளது. அதிலும் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளி–யிட்டு லைக்குகளை பெறுவ–திலும் அவர்கள் முன்னேற் றம் கண்டுள்ளனர். அதுபற் றிய விபரம் வருமாறு:-

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் அடைக்கலம் என்கிற முதி–யோர் இல்லம் செயல் பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டு–களாக இலவசமாக நடத்தப் பட்டு வரும் இல்லத்தில் கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், சாலையோரம் தவித்தவர் கள், தனிமையில் வாடுபவர் கள் என தற்போது 14 பாட்டிகளும், 11 தாத்தாக்க–ளும் தங்கியுள்ள–னர்.

    இதுவரை 14 பேர் இறந்துள்ள நிலையில் 58 பேர் வசித்துள்ளனர். முதி–யோர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக் கேற்ற உணவுகள் தவறாமல் வழங்கப்படுகிறது. பொழுதை கழிக்க பழங்கதை பேசியவர்கள் தற்போது ஆண்டிராய்டு போன்கள் பற்றியும் அறிந்து, தெரிந்து பழகிக்கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த இல்லத்தைச் சேர்ந்த முதிய–வர்கள் சினிமா பாட–லுக்கு நடனமாடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் அடைக்க–லம் என்கிற பெயரில் வீடியோக்கள் வைரலாகி மில்லியன் கணக்கில் பார் வை–யாளர்களை பெற்று சாதனை படைத்துள் ளது.

    மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லக்கண்ணு... என்ற புதிய ரீமேக் பாடலுக்கு ஏற்ப நளினமாக ஆடிய நடனம் பார்வையாளர்க–ளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து அந்த முதி–யோர் இல்லத்தில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் ராக்காயி கூறியதாவது:-

    குடும்ப சூழ்நிலை கார–ணமாக இங்கு வந்தோம். இங்கு எங்களை நல்லபடி–யாக பார்த்துக் கொள்கி–றார்கள். நடனம் ஆடுவதில் ஆர்வம் இருந்த காரணத்தால் நடனமாடி வீடியோ எடுத் தோம். மேலும் இதுபோன்ற விஷயங்களை செய்வது மூலம் எங்கள் கஷ்டங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்கி–றோம்.

    மனதில் அடக்கி வைத்தி–ருந்த கஷ்டங்கள் காணாமல் போய்விட்டது. இந்த வீடியோ காட்சிகள் எதார்த்தமாக நாங்கள் எடுத்தோம். ஆனால் தற்போது இதை பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றனர்.

    • தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
    • தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி சாலை அசர்நகர் கிழக்கில் அமைந்துள்ள வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலை குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொள்ளும் தாத்தா - பாட்டிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் சாருலதா, மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் துணை முதல்வர் சித்ராதேவி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.மேலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆஷா நன்றி கூறினார்.

    ×