திருப்பூர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாட்டம்

தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
திருப்பூர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம்  கொண்டாட்டம்
Published on

திருப்பூர் :

திருப்பூர் அவினாசி சாலை அசர்நகர் கிழக்கில் அமைந்துள்ள வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலை குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொள்ளும் தாத்தா - பாட்டிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் சாருலதா, மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் துணை முதல்வர் சித்ராதேவி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.மேலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆஷா நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com