search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GOVT.HOSPITAL"

    • தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
    • முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் , செவிலிய ர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவம னைக்கு வரும் பொதுமக்க ளிடம் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும், முக கவசம் அணியாமல் வர தடை செய்யப்பட்டுள்ள தாகவும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் அரசு மருத்து வமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
    • சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை மருத்துவர் பெரிசாமி தலைமை வகித்தார். மருத்துவர் அருண்குமார் முன்னிலை வகித்தார், மருத்துவர் லிபர்த்தி வரவேற்று பேசினார். இதில் கொரானா காலத்தில் சிறப்பாக பணி புரிந்த மருத்துவ ர்கள், செவிலியர்கள், மருத ்துவமனை ஊழி யர்கள் பாராட்டி சிறப்பிக்கப்பட்டா ர்கள்.

    இம்மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து சிறப்பாக செயல்பட்ட செவிலியர் செல்வகுமாரி, விண்ணரசி, கீதா ஆகியோருக்கு மயக்கவியல் தின சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை மருத்துவர் பெரிசாமி பேசும் போது;

    மயக்கவிய ல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதி கொண்டா டப்படுகிறது. 1846 ஆம் ஆண்டு வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்த நாளாகும். இதன்பிறகே அறுவைசிகிச்சை மிகவும் பாதுகாப் பாகவும்,நோய் தீர்க்கும்

    ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேரில் சுமார் 11 சதவீதம் மக்கள் அனஸ்தீசிய சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இதில் 30 முதல்49 வயதினரே அதிகம் உள்ளனர். மயக்கவியல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டுமின்றி , தீவிர சிகிச்சையிலும் மகத்தான பணியாற்றிவருகின்றனர்.ஆகவே அவ ர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

    இதில் மருத்துவர் மணிவண்ணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி , செவிலியர்கள் வேலுமணி, கலைச்செல்வி, ஜான், திவ்யா, ஆறுமுகம், சிவசங்கரி, சக்கரவர்த்தி, லட்சுமி பிரபா, பூபாலன் மோனாபாய் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். டாக்டர் லதா நன்றிகூறினார்.

    ×