search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govindhammal Aditanar Women's College"

    • இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்கள் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து சர்தர் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் ஒழிப்பு வார விழாவினை நடத்தியது.

    உறுதிமொழி

    நம் நாட்டின் பொருளா தாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதை உணர்ந்து ஒவ்வொரு குடிமகனும் நேர்மை. கண்ணியத்துடன் ஊழலை ஒழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை கல்லூரி முதல்வர் பொ. ஜெயந்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதா மற்றும் அனிதா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் மாணவிகளிடம் ஊழல் சார்ந்த புகார்களை தெரிவிக்கும் வழிமுறைகளை குறித்த துண்டு பிரசாரத்தை காவல்துறையினர் வழங்கினர்.

    வீதி நாடகம்

    பின்னர் கல்லூரியின் வேதியியல்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவிகள் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை, சப்-இன்ஸ்கெ்டர் தளவாய் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மா. ஜான்சி ராணி முனைவர் ரெ. சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார்.
    • மேலும் ‘கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்’ மற்றும் ‘பைதான்’ கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 'தொழில் வளர்ச்சி செறிவூட்டல் திட்டம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் (பொறுப்பு) அனிதா வரவேற்று பேசினார். தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார். மேலும் 'கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்' மற்றும் 'பைதான்' கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஒருங்கிணைப்பாளர் இந்துமதி நன்றி கூறினார்.

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக கணித அறிவியல் பள்ளி கவுரவ பேராசிரியர் மருதை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 'சி.எஸ்.ஐ.ஆர். தேர்வில் சிக்கல் தீர்க்கும் நுட்பம்' என்ற தலைப்பில் பேசினார். ஆதித்தனார் கல்லூரி கணிதத்துறை பசுங்கிளி பாண்டியன், அக்கல்லூரியின் கணிதத்துறை முன்னாள் பேராசிரியர் ராபர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் முதுகலை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி அஷ்டலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தங்கம், உஷா பரமேஸ்வரி, வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
    • எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் மாணவிகளுக்கு பனை விதைகளை நடும்முறை குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் பகுதி பனை வாரியத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் பணியின் ஒரு பகுதியாக வீரபாண்டி யன்பட்டிணம் அருகில் உள்ள ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரி முதல்வர் முனைவர் பொ. ஜெயந்தி வழிகாட்டுதலின்படி பனை விதைகளை நடும் பணி நடைபெற்றது.

    5 ஆயிரம் பனை விதைகள்

    அதற்கு முதற்கட்டமாக கல்லூரி மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அவற்றை ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பணி த்திட்ட மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும்பணியில் பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாணவிகளுக்கு பனையின் இன்றியமையாமை குறித்தும், வருங்கால சந்ததியினருக்கு பனை பயன்படும் விதம் குறித்தும் இன்றைய தலைமுறை யினரின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார். எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் மாணவிகளுக்கு பனை விதைகளை நடும்முறை குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.

    அமைச்சர் தொடங்கி வைத்தார்

    நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எல்-பாஸ் விழிப்பு ணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், மாவட்ட பொறுப்பாளர் காமராசு நாடார், பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, கவுன்சிலர் சுகு, திருச்செந்தூர் பனை வாரிய உறுப்பினர்கள் ஆன்டோ, பிரிட்டன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஜான்சி ராணி, முனைவர் சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×