search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus collided"

    • அரசு பஸ் டிரைவர் நந்தகோபால கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்தார்
    • அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.

    கடலூர்:

    நெய்வேலியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை பண்ருட்டி நோக்கி வந்தது. அரசு பஸ் டிரைவர் நந்தகோபால கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்தார்.அரசு பஸ் மோதியது பண்ருட்டி ஒன்றியம் அன்னக்காரன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசு மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அன்னக்காரன் குப்பம் வடக்குத் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சம்பத்குமார் (வயது 23), என்பவரும் பின்னால் உட்கார்ந்து வந்த அவரது தங்கை சவுந்தர்யா ஆகிய 2 பேரும் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்தால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.

    விசாரணை இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே விபத்து லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலியானார்.
    • முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை கோயம்பே ட்டில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றி க்கொண்டு விருதாச்சலம் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணம் கோ அருகே உள்ள சாவடி குப்பம் பகுதியை சேர்ந்த இளையராஜா(42), என்பவர் ஓட்டி சென்றார்.கண்டக்டராக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(45) உடன் வந்தார். அப்போது திண்டிவனம் அருகே மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேனிப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் அதி வேகமாக மோதியது. இந்த விபத்தில் இடது புறமாக அமர்ந்து சென்ற நடத்துனர் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலாஹிர் அஹமது(35), உன்னலட்சுமி (42), திட்டக்குடியை சேர்ந்த அமல்ராஜ்(25), திருக்கோவிலூரை சேர்ந்த கோவிந்தராஜ்(41), வேப்பூர் பகுதியை சார்ந்த சுரேஷ்(37), உஷா (42) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கண்டக்டரின் உடல் பிரேதபரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×