search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "good judgement"

    காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #cauveryissue #edappadipalanisamy #supremecourt

    அவனியாபுரம்:

    கொடைக்கானலில் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவதற்காக இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே இனி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை.

    அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி பிரச்சினையில் வெற்றி பெற்றுள்ளது. 32 ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #cauveryissue #edappadipalanisamy #supremecourt

    “காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #Cauvery #EdappadiPalanisamy
    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    “காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மத்திய அரசு சில யோசனைகள் அடிப்படையில் கருத்து தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையின்படி நாளை (புதன் கிழமை) தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகியதால் இறுதி தீர்ப்பு வழங்கக்கூடிய நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தமிழக அரசை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது.”

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #EdappadiPalanisamy

    ×