search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goddess Parvathi"

    • திருமணமான பெண்களால் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
    • வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள்.

    வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. திருமணமான பெண்களால் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் 2023 தேதி ஆகஸ்ட் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள்.

    தமிழ் மாதமான ஆடியின் பவுர்ணமி அல்லது பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரத நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது செல்வம், பூமி, கற்றல், அன்பு, புகழ், அமைதி, இன்பம், வலிமை ஆகிய எட்டு தெய்வங்களான அஷ்டலட்சுமியை வழிபடுவதற்கு சமம். வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவம் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவத்தை சிவபெருமான், பார்வதி தேவிக்கு எடுத்துரைத்ததாக நம்பப்படுகிறது.

    விரதம் இருக்கும் முறை:

    விரதம் அன்று வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு மாவிலை தோரணங்கள் மற்றும் கோலங்களால் அலங்கரிக்க வேண்டும். லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்கள் வாசிக்க வேண்டும். லட்சுமி தேவியின் சிலையை அலங்கரிக்க வேண்டும். அரிசி மற்றும் பானையின் கழுத்தில் பாதி நிரப்பப்பட்ட கலசம் புதிய மாம்பழம் மற்றும் வெற்றிலைகளால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவை தடவப்பட்ட தேங்காயை பூஜையறையில் வைத்து அதில் லட்சுமி தேவி அழைப்பார்கள். பூஜை முடியும் வரை பெண்கள் விரதம் இருப்பார்கள்.

    அன்றைய தினம் வடை, மாங்காய் சாதம், பருப்பு வடை போன்ற சிறப்பு உணவுகளும், பாயசம் போன்ற இனிப்புகளும் தயாரிக்கப்படும். பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கூடி மாலையில் சமூக ஆரத்தியில் பங்கேற்பர். வளையல், குங்குமம், வெற்றிலை, பழங்கள், பூக்கள் போன்ற பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். வர மஹாலட்சுமி தொழில் தொடங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், வாஸ்து செய்வதற்கும் உகந்த நாள்.

    வரலட்சுமி விரதம் கதை:

    விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக, சிவன் சாருமதியின் கதையை விவரிக்கிறார். சாருமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பக்தியை கண்டு மகிழ்ந்த லட்சுமி தேவி அவரது கனவில் தோன்றி, வரலட்சுமி விரதத்தை செய்யச் சொன்னார். பக்தியுள்ள சாருமதி தனது அண்டை வீட்டாரையும், நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து, லட்சுமி தேவியின் கட்டளைப்படி வரலட்சுமி பூஜையை நடத்தினாள். பூஜை முடிந்த உடனேயே, பூஜையில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் அருள் பாலித்தார்கள்.

    மற்றொரு கதை, ஒருமுறை சிவனும் பார்வதியும் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் சிவ பெருமான் வெற்றி பெற்றார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பார்வதி தேவி, சித்ரமணியை அழைத்து இந்த விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்லும்படி கேட்டார். சித்ரமணியும், சிவ பெருமானே வெற்றி பெற்றதாக தெரிவித்தது. இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, சித்ரமணியை தொழு நோயால் பாதிக்கும்படி சாபம் அளித்தார். பிறகு பார்வதியை சமாதானம் செய்த சிவ பெருமான், உண்மையை உரிய வைத்தார். சித்தரமணி மீது இரக்கம் கொண்ட பார்வதி, வரலட்சுமி விரதம் கடைபிடித்தால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என அருளினாள். சித்ரமணியும் வரலட்சுமி விரதம் இருந்து, சாப விமோசனம் பெற்றார்.

    வரலட்சுமி விரத பலன்

    வரலட்சுமி விரதம் இருப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும். தீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். மன அமைதி கிடைப்பதுடன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

    ×