search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl committed suicide"

    • நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நத்தம்:

    நத்தம்- மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் தர்ஷினிபிரியா (16). இவர் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிக்கடி செல்போனில் டிக்டாக் பார்ப்பதையும், கேம் விளையாடுவதையும் கணவர் கண்டித்ததால் வெண்ணிலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தாண்டிக்குடி அருகே உள்ள அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27).

    கூலித்தொழிலாளி. இவருக்கும் வெண்ணிலா(21) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. வெண்ணிலா அடிக்கடி செல்போனில் டிக்டாக் பார்ப்பதையும், கேம் விளையாடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இதனை மணிகண்டன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த வெண்ணிலா விஷம் குடித்து மயங்கிகிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×