search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் பேசியதை கண்டித்ததால் புதுப்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    செல்போனில் பேசியதை கண்டித்ததால் புதுப்பெண் தற்கொலை

    • அடிக்கடி செல்போனில் டிக்டாக் பார்ப்பதையும், கேம் விளையாடுவதையும் கணவர் கண்டித்ததால் வெண்ணிலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தாண்டிக்குடி அருகே உள்ள அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27).

    கூலித்தொழிலாளி. இவருக்கும் வெண்ணிலா(21) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. வெண்ணிலா அடிக்கடி செல்போனில் டிக்டாக் பார்ப்பதையும், கேம் விளையாடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இதனை மணிகண்டன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த வெண்ணிலா விஷம் குடித்து மயங்கிகிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×