search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhipuram Town bus stand"

    • ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சாலைகளில் மிதிவண்டியில் செல்பவா்களுக்கு பிரத்யேக பாதை, நடந்து செல்பவா்களுக்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
    • மாநகரில் கிராஸ்கட் சாலையில் வண்ணம் பூசப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல பிரத்யேக சாலை அமைக்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு, மிதிவண்டிப் பாதை, நடைப்பாதை, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சாலைகளில் மிதிவண்டியில் செல்பவா்களுக்கு பிரத்யேக பாதை, நடந்து செல்பவா்களுக்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி சோதனை அடிப்படையில் கோவை மாநகராட்சி எதிரே டவுன்ஹாலில் நடந்து செல்பவா்களுக்கு ஒரு பாதை, மிதிவண்டியில் செல்பவா்களுக்கு ஒரு பாதை என தனியாக அமைக்கப்பட்டன. இதேபோல, காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, தற்போது கிராஸ்கட் சாலையில் நடந்து செல்பவா்களுக்கு பிரத்யேக சாலைகள் நிரந்தரமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

    கோவை கிராஸ்கட் சாலை, டவுன்ஹால் சாலையில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட வண்ணமயமான பிரத்யேக மிதிவண்டிப் பாதை, நடைப்பாதை திட்டங்களை ெகாரோனா பாதிப்பு காரணமாக கடந்த காலங்களில் நிரந்தரமாக செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது, முதல்கட்டமாக மாநகரில் கிராஸ்கட் சாலையில் வண்ணம் பூசப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல பிரத்யேக சாலை அமைக்கப்பட உள்ளது. வெயில், மழை போன்றவற்றில் இருந்து மக்களை காக்கும் விதமாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேற்கூரையும் அமைக்கப்பட உள்ளது என்றாா்.

    • கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
    • 2 வாலிபர்கள் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    கோவை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேர் விஜயகுமாைர அசைய முடியாதபடி மடக்கி பிடித்தனர். பின்னர் மற்றொரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.980 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஜயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் சென்ற காந்திபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அஜித், பாலாஜி ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    • கோவை புறநகர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பணி நிமித்தமாகவும், கல்லூரி படிப்பு விஷயமாகவும் கோவை மாநகருக்கு வருகின்றனர்.
    • பஸ் நிலையத்தில் இருந்த பெண்கள் முகம் சுளித்தனர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான தனியார் பஸ் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை புறநகர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பணி நிமித்தமாகவும், கல்லூரி படிப்பு விஷயமாகவும் கோவை மாநகருக்கு வருகின்றனர். இதற்கு அவர்கள் பெரும்பாலும் பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் சிலருக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. ஆபாச வார்த்தைகளால் பேசி ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்.

    அவர்கள் பேசிய ஆபாச வார்த்தைகளால் பஸ் நிலையத்தில் இருந்த பெண்கள் முகம் சுளித்தனர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    இந்த காட்சிகளின் அடிப்படையில் காட்டூர் போலீசார் அடிதடியில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்கள் மற்றும் வாலிபர்கள் சிலரை இன்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முடிவில் அவர்கள் மீது வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் அடிக்கடி பஸ் ஊழியர்கள், வாலிபர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருவதாகவும், இதனைத்தடுக்க இரவு நேரத்தில் அங்கு கூடுதலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×