search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திபுரத்தில் தொழிலாளியிடம் செல்போன், பணம் பறித்த வாலிபர் கைது
    X

    காந்திபுரத்தில் தொழிலாளியிடம் செல்போன், பணம் பறித்த வாலிபர் கைது

    • கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
    • 2 வாலிபர்கள் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    கோவை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேர் விஜயகுமாைர அசைய முடியாதபடி மடக்கி பிடித்தனர். பின்னர் மற்றொரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.980 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஜயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் சென்ற காந்திபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அஜித், பாலாஜி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×