search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FUNDS ALLOCATION"

    • காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    புளியங்குடி:

    நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புளியங்குடி நகராட்சிக்கு சொந்தமான காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை யான கட்டிட வளாகம் ஆகும். மேற் குறிப்பிட்ட காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.

    காந்தி நினைவு தினசரி வியாபாரிகளின் கோரிக்கைப்படி அப்பகுதியில் வைத்திருந்த வியாபாரிகளின் வாழ்வா தாரம். கருதி மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி இடத்தில் புதிய காந்தி வணிக வளாகம் தரைதளம் மற்றும் முதல் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், தென்காசி மாவட்ட கலெக்டர் கடிதத்தின் படி புளியங்குடி நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வடக்கு ரதவீதியில் வருவாய் துறைக்கு சொந்தமான வார்டு-ஈ பிளாக்-2. டி 5.நம்.1/7- ல் 30 செண்ட் நிலமும், சுகாதார நிலையம் கட்டுவதற்கு 20 செண்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு உத்தேச தொகை ரூ.10 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சந்திப்பின் போது சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ. மற்றும் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்
    • விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரை வழங்கப்பட உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நிகழாண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் மற்றும் ெஜயங்கொண்டம் டெல்டா பகுதிகளில் 3,000 ஏக்கரில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருள்கள் வழங்குவதற்காக ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி. மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.

    மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.17.50 வீதம் 40 டன் விதைகள் 5,000 ஏக்கருக்கு விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறுவை பருவத்தில் மாற்றுப்பபயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு 500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருள்கள், விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

    குறுவையில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 1,000 ஏக்கரில் உளுந்து பயிரிடும் போது விவசாயிகளுக்கு விதைகள், இலை வழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்க 70 சதவீத மானியத்தில் ரூ.1,570-ம் வழங்கப்பட உள்ளது.

    குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக 400 ஏக்கரில் பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5600 வரையிலும் வழங்கப்பட உள்ளது.

    ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். திருமானூர், தா.பழூர் மற்றும் ெஜயங்கொண்டம் டெல்டா வட்டார விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×