search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "functioning"

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 போட்டி தேர்வு மையங்கள் செயல்படுகிறது
    • அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப் பிக்காத மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 52 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-

    இந்திய அளவில் தமிழ் நாட்டில் தான் 52 விழுக்காடு மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற னர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் சதவீதத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

    அதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்க ளுக்கு பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளில் சேருவ தற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்களில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கனவே அருப்புக் கோட்டை, சிவகாசி கோட்டங்களில் நடத்தப்பட்டு, தற்போது சாத்தூர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

    விருதுநகர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தொடர்ந்து வருகிறது. அதுபோல் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையில் சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் செயலாற்றிவருகிறார்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வெள்ளையர் ஆட்சிக்காலத்து மரபான தர்பார் மாற்றத்தின்படி காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் நாளை முதல் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat
    ஸ்ரீநகர்:

    தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றன.

    ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கோடை மற்றும் கடுங்குளிர் காலங்களில் தலைமை செயலகம் முறையே ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் என இரு இடங்களில் இயங்கி வருகிறது.

    இப்படி தலைமைச் செயலகத்தை மாற்றும் இந்த மாற்றமானது, தர்பார் மாற்றம் என்றழைக்கப்படும் இந்த வழக்கம் காஷ்மீரை குலாப் சிங் என்ற மன்னர் ஆட்சி செய்த 1872 முதல் கடந்த 146 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலைமை செயலகம் மட்டுமின்றி அம்மாநில கவர்னர் மாளிகையும் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் இயங்கும்.

    குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மற்றும் முக்கிய கோப்புகளை ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

    இதற்கு வசதியாக ஸ்ரீநகரில் இயங்கி வந்த மாநில தலைமை செயலகம் கடந்த மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீநகரில் தங்கியிருந்த அரசுப் பணியாளர்களும் ஜம்முவுக்கு திரும்பத் தொடங்கினார்கள். 

    இந்நிலையில், நாளை முதல் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகம் ஜம்முவில் இயங்கத் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இன்னும் 6 மாதத்திற்கு காஷ்மீரின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat 
    ×