search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fruits and vegetables"

    பழ வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவைகளை சாப்பிடுவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன.
    பழ வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவைகளை சாப்பிடுவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. விரும்பிய நேரமெல்லாம் பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்காது. எந்தந்த நேரத்தில் எந்தந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

    காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்த சமயத்தில் செரிமான செயல்பாடு சீராக இயங்கும். பழங்களில் உள்ள அனைத்து சத்துக்களை யும் உறிஞ்சு எடுத்துக்கொள்ள உடல் ஒத்துழைக்கும்.

    காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாக அன்னாசி, முலாம் பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடுவது எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எளிதாக செரிமானம் நடைபெறவும் உதவி புரியும். முலாம் பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், மாம்பழம், பெர்ரி வகை பழங்களை அப்போது சாப்பிடலாம். மதிய சாப்பாட்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்கள் சாப்பிட வேண்டும் என்பது அவசியம்.

    வேலைக்கு செல்வதற்கு முன்பும், வேலை முடிந்த பின்பும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அது சோர்வின்றி உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு பக்கபலமாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    இரவு சாப்பாட்டுக்கு முன்பு பழங்கள் சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்துக்கள் பசியின் வீரியத்தை குறைக்கும்.

    சாப்பிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ, தூங்க செல்வதற்கு முன்போ பழங்கள் சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்படும். பழங்களில் இருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.

    உணவுடன் சேர்த்து பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அப்படி செய்வது செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.

    அந்தந்த பருவகாலங்களில் விளையும் பழங்கள் உடலுக்கு ஏற்றது.

    சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பொட்டாசியம் அளவு குறைவாக உள்ள பப்பாளி, ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். அதுவும் டாக்டரின் ஆலோசனை பெற்றே சாப்பிட வேண்டும். 
    ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.
    ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.

    * தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்ப்பூசணி விதைகளை அப்படியே சாப்பிட விருப்பப் படாதவர்கள் முளை கட்ட வைத்து சாப்பிடுவது நல்லது. அதில் புரத சத்தும் அடங்கியிருக்கிறது.

    * பப்பாளி விதைகள் கசப்பு தன்மை கொண்டவை. அதேவேளையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டவை. செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். அதில் உள்ளடங்கியிருக்கும் கசப்பு தன்மையை நீக்க தேன் கலந்து கசாயமாக தயாரித்து பருகலாம். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.

    * சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகளின் பங்களிப்பு அவசியமானது. புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பூசணி விதைகளை சூப்பாகவோ, தயிருடனோ அல்லது பிற காய்கறி, பழங் களுடன் சேர்த்து சாலட்டாகவோ சாப்பிடலாம்.

    * சூரியகாந்தி விதைகள் ஆன்டிஆக்சிடென்ட் குணங்களைக் கொண்டுள்ளன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கீழ்வாதம், ஆஸ்துமாவை தடுக்கவும் உதவுகின்றன. செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் துணைபுரியும். நோய் எதிப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகளை சாலட்டுகளாகவோ, தானியங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * சரும சுருக்கங்கள் மற்றும் தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் பலாப்பழ கொட்டைகளை சாப்பிட்டு வரலாம். இவை ரத்த சோகையை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. பலாப்பழ கொட்டைகளை சமையலில் சேர்த்தோ அல்லது நீரில் வேகவைத்தோ சாப்பிடலாம்.

    * ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. அவைகளை வறுத்தோ, சாலட்டுகளாக தயாரித்தோ சுவைக்கலாம். ரத்த அழுத்தத்தை சீர் செய்யவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது உதவும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவும்.
    ×