search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Toilets"

    • அமைச்சர் ராமச்சந்திரன் பணியினை தொடங்கி வைத்தார்
    • ரூ. 70 லட்சம் செலவில் இலவசமாக கழிப்பறைகள் கட்டித்தர மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஊட்டி,

    குன்னூா் அருகே உள்ள பழைய அருவங்காடு, இந்திரா நகா், நுந்தளாமட்டம், கேத்திப் பாலடா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு கழிப்பறை வசதியில்லாத 110 குடியிருப்புகளுக்கு கிராமிய அளவிலான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ. 70 லட்சம் செலவில் இலவசமாக கழிப்பறைகள் கட்டித்தர மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சா் கா. ராமசந்திரன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.

    நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷணகுமாா், மகேந்திரா நிறுவனத்தின் கிராமப்புற வா்த்தக மேலாளா் ரவிசங்கா், மகேந்திரா வா்த்தக பிரிவைச் சோ்ந்த மகேஷ்கண்ணா, ஹைலேண்ட் டிரஸ்ட் இயக்குநா் அல்போன்ஸ்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    கட்டணமில்லா கழிப்பிட விவகாரத்தில் டெல்லியில் உள்ள நடைமுறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #MaduraiHCBench #FreeToilet
    மதுரை:

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி சுகாதாரமாக இல்லை. டெல்லி, திருப்பதி போன்ற நகரங்களில் உயர்தரத்துடன் இலவச கழிப்பறைகள் உள்ளன. அதேபோன்று தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்க உத்தரவிடவேண்டும்’ என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கட்டணமில்லா கழிப்பிட விவகாரத்தில் டெல்லியில் உள்ள நடைமுறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    “டெல்லியில் உள்ள பொது கழிப்பிடங்கள் சுத்தமாக உள்ளன, கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பொது கழிப்பிடங்களில் தனியார் விளம்பரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை, கழிப்பிட மேம்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள். அதே நடைமுறையை தமிழகத்தில் பின்பற்றலாம்.

    ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து, டெல்லி சென்று அங்குள்ள இலவச கழிப்பிடங்களை ஆய்வு செய்து, அதனை தமிழகத்தில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். #MaduraiHCBench
    ×