search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free gas"

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. #CentralGovernment #gascylinder

    சென்னை:

    பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 6 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அந்த இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி வருகிற மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 2 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் இதுவரை 27லட்சத்து 87 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 11 லட்சம் இலவச இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை, வங்கி பாஸ்புத்தகம், 3 புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை அருகில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வழங்கி இத்திட்டத்தின் கீழ் இலவச இணைப்பை பெறலாம்.

    கிராமப் பகுதிகளில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊழியர்கள் வீடுதோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #CentralGovernment #gascylinder

    ஆண்டிப்பட்டி பகுதியில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்படுவதில் முறைகேடு நடந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    மத்திய அரசு ஏழை எளிய கிராமப்புற குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பாரதப் பிரதமர் உஷாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புகையில்லா இலவச கியாஸ் இணைப்பு வழங்கி வருகிறது.

    அதன்படி எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி.சி. பிரிவினர், மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு விதிகளுக்குட்பட்டு, இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தற்போது ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் இயங்கி வரும் தனியார் கியாஸ் ஏஜென்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனைத்து பிரிவினருக்கும், பணத்தை பெற்றுக் கொண்டு கேஸ் இணைப்புகள் வழங்கி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கன்னியப்ப பிள்ளைபட்டி, பொட்டவாத்து, ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்த விதிகளை பின்பற்றாமல் 500-க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

    பிச்சம்பட்டி ஊராட்சியில் மட்டுமே 200 இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலும் அரசுக்கு 20 லட்சத்திற்கும் மேல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்கவும், விதி மீறி வழங்கப்பட்ட இணைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். #tamilnews
    ×