search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former Minister Rajalakshmi"

    • கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
    • அதை முன்னிட்டு சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன் பேரில் நாளை (புதன்கிழமை) மாலை சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதை முன்னிட்டு சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று சங்கரன்கோவில் இந்திரா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பொது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், கந்தசாமி, நகர பேரவை செயலாளர் சவுந்தர், மாநில பேச்சாளர்கள் ராமசுப்ரமணியன், லட்சுமணன், கவுன்சிலர் சங்கரசுப்ரமணியன், மாணவரணி செயலாளர் மாரியப்பன், மோகன், பாசறை நிவாஸ், தங்கம், குட்டி மாரியப்பன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் கோவில் வாசல் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
    • தொடர்ந்து ஆட்டோக்கள், பைக்குகள், செல்போன்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    ஸ்டிக்கர் ஒட்டும்பணி

    இதுபற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாநாட்டிற்கான விளம்பர பதாதைகள் மற்றும் ஸ்டிக்கர்களை சங்கரன்கோவில் நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், செல்போன்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில் கோவில் வாசல் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வாசுதேவன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து ஆட்டோக்கள், பைக்குகள், செல்போன்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, குருவிகுளம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் நகர அவைத் தலைவர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சவுந்தர், மாநில பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், அரசு ஒப்பந்ததாரர் குட்டி மாரியப்பன், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் நிவாஸ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தலைவர் குருசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயக்குனர் வெள்ளைத்துரை, கிளைச் செயலாளர்கள் பாபு கதிரேசன், முருகன், சிவஞானராஜா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுடலை, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் தங்கம், தகவல் தொழில் நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் ஜிம் சுந்தர், ராஜ்குமார், முகமதுமீரான், முகமதுஅலிபா, ராமலட்சுமி மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×