search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Five days"

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 38.5 டிகிரி செல்சி யஸ் ஆகவும், இரவு வெப்பம் 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 38.5 டிகிரி செல்சி யஸ் ஆகவும், இரவு வெப்பம் 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.

    இன்று 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை இருக்கும்.

    வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 55 முதல் 75 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    இந்த நிலையில், இன்று 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத் தில் பரவலமாக மழை பெய்ய வாய்ப்புள்ளளது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் தலா 8 மி.மீ, 5 முதல் 7-ந் தேதி வரை தினசரி 4 மி.மீ மழை யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோழிப்பண்ணையாளர்களுக்கு: சமீப நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால், கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிக மாகியுள்ளது. ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும். ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்தலாம்.

    கால்நடை வளர்ப்போருக்கு: தற்போது மாவட்டத்தில் ஆங்காங்கே ஆட்டுக் கொல்லி நோய் தாக்குதல் தென்படுகிறது. இதை தடுக்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒரு முறை மறு தடுப்பூசி போட வேண்டும்.

    விவசாயிகளுக்கு:நடப்பு சித்திரைப் பட்டத்தில் நிலக்கடலை கோ-7 மற்றும் தரணி ரகத்தை தேர்வு செய்து விதைக்கலாம். நடப்பு மானாவாரி பரு வத்தில் ஆமணக்கு, உளுந்து, பாசிப்பயறு ரகத்தினை பயிரிடலாம். மரவள்ளிக்கி ழங்கு பயிரில் செம்பேன் நோய் தாக்குதலை கட்டுப்ப டுத்த இலை வழியாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என வானிலை முன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×