search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "filming"

    • முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார்.
    • விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகமான விஜயகாந்த், மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிட உட்காரும்போது தானும் சாப்பிடுவதற்காக மேஜையில் அமர்ந்தார். அப்போது படக் குழுவை சேர்ந்த ஒருவர், படத்தின் ஹீரோவே இன்னும் சாப்பிடவில்லை. அதற்குள் முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார். அரிசி ஆலை வைத்திருந்த விஜயகாந்துக்கு அன்று உணவுக்கு ஏற்பட்ட நிலைமை அவரை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து சினிமா துறையில் நாம் உயரத்தை எட்டியதும் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதை முதல் கடமையாக செய்ய வேண்டும் என்று அவருக்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.

    அதன்படி சினிமா துறையில் அவர் சாதித்ததும் சாப்பாடு விஷயத்தில் அனைவருக்கும் உணவு கொடுப்பதில் மிகவும் முன்னுரிமை கொடுத்து வந்தார். படப்பிடிப்பில் சினிமா தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு கொடுப்பதை விஜயகாந்த் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தான் மற்றவர்களும் 3 வேளை உணவு கொடுக்க தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    • நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

    ×