search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer training"

    • பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
    • கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    ஈரோடு:

    பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24-ம் ஆண்டு கலை ஞர் திட்டம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்ட பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு காரீப்பின் பருவ விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.

    இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இய க்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் எள் பயிர்களுக்கான உழவு, ரகத்தேர்வு, மண்பரிசோதனை மற்றும் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நிலக்க டலை, எள் மற்றும் மக்கா ச்சோளம் போன்ற பயிரில் விதை தேர்வு முறை, விதை ப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்கு தல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

    பவானி உதவி வேளா ண்மை அலுவலர் சித்தையன் கிராம வேளாண் முன்னேற்ற க்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், பூங்கோதை ஆகியோர் நன்றி கூறினர்.

    சங்கராபுரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாடுர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் அட்மா திட்டம் மூலம் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி தலைமை தாங்கி வேளாண்மை மானியங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி விவசாயிகளை வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் மண்மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை எதவி அலுவலர் அமிர்தலிங்கம் மேற்கொண்டார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

    வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடியில் பருப்பு ஆலை அமைக்கும் முறை குறித்த பயிற்சி நடத்தியது.

    வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி உதவி பேராசிரியர் தேன்மொழி கலந்து கொண்டு பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றியும், பருப்பு வகைகளில் மதிப்புக் கூட்டுதல் பற்றிய அனைத்து தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரங்கசெல்வி அட்மா திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்படும் பயிற்சிகள் மற்றும் உழவர் நண்பர்களின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முக பாண்டி, வினோதா உழவன் செயலி மற்றும் ஸ்மார்ட் சிவகங்கை செயலி குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ×