search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crop management"

    சங்கராபுரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாடுர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் அட்மா திட்டம் மூலம் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி தலைமை தாங்கி வேளாண்மை மானியங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி விவசாயிகளை வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் மண்மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை எதவி அலுவலர் அமிர்தலிங்கம் மேற்கொண்டார்.

    • சிற்றாறு பாசன பகுதி விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
    • திருந்திய நெல் சாகுபடியின் தொழில்நுட்பங்களை எடுத்து கூறப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசன பகுதியான பண்பொழி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகச்சாமி திருந்திய நெல் சாகுபடியின் தொழில்நுட்பங்களை எடுத்து கூறினார். உதவி பேராசிரியர் ஸ்ரீரெங்கசாமி மண்வளம் மற்றும் பயிர்களில் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து கூறினார்.

    உதவி பேராசிரியை ரஜினிமாலா பயிர்களில் ஏற்படும் நோய் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறினார். வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உழவியல் தொழில்நுட்ப முறைகளை எடுத்து கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீர்வள, நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக் குமார் செய்திருந்தனர்.

    ×