என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "F16 fighter jet"

    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுகிறது.
    • F-16 விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    அதன்பின் மே 7 முதல் மே 10ஆம் தேதி வரை 88 மணி நேரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் ரஃபேல் விமானங்களும் அடங்கும் எனத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களா? அலல்து இந்தயி போர் விமானங்களா? என்று அவர் குறிப்பிடவில்லை.

    இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னதாக இந்திய விமானப்படை தளபதி, பாகிஸ்தானைச் சேர்ந்து 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். மேலும், ஒரு பெரிய விமானத்தை வீழ்த்தினோம் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்று அமெரிக்க அரசிடம், F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியது.

    இதற்கு அமெரிக்கா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டது. மேலும், F-16 விமானங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நாங்கள் உங்களைப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறியுள்ளது.

    அமெரிக்க நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானத்தை வழங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் என்ற குழு பாகிஸ்தானில் 24/7 என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த குழு F-16 போர் விமானத்தின் முழு விவரத்தையும் ஒப்பந்த்தின்படி அறிந்து கொள்வது அவர்களது கடமையாகும். அப்படி இருக்கும்போது F-16 போர் விமானம் குறித்த தகவல்கள் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் எப்-16 ரக போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் பேஸ் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

    பிற்பகல் 3.45 மணியளவில் வேன் புரேன் பவுலேவார்ட் நகரத்தின்மீது பறந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி ஒரு பண்டகச்சாலைக்குள் (கிடங்கு) பாய்ந்தது. இந்த விபத்தில் கிடங்கின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது.



    சமயோசிதமாக பாரசூட் மூலம் கீழே குதித்த விமானி மற்றும் இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×