search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye examination"

    • மதுரை திருமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தனியார் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    இதற்கான ஏற்பாட்டை 23-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் செய்திருந்தார். நகர தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வைத்தார். இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பார்வை உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. நகர செயலாளர் பால்பாண்டி, நிர்வாகிகள் செல்லப்பாண்டி, துரை சண்முகம், முன்னாள் கவுன்சிலர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாரத் நாச்சியப்பன், பைரவ மூர்த்தி, மாநில இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார். மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கச்சைகட்டி பாண்டி, தண்டீசுவரன், பொதும்பு செல்வம், புதுப்பட்டி கார்த்தி, பரவை ராமு, எம்.ஏ.முத்து, காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிஷா தலைமையில் 82 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 41 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்

    • இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார்.

     அலங்காநல்லூர்

    பாலமேட்டில் உள்ள தனியார் மகாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்து வமனை முகாம் ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், தானம் அறக்கட்டளையின் கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா மற்றும் பாலமேடு வட்டார களஞ்சிய ஒருங்கி ணைப்பாளர் வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

    முகாமிற்கான பணிகளை பாலமேடு வட்டார களஞ்சிய தலைவிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 230க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    ×