search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ex wife"

    அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55).

    இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார்.

    அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

    இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

    மெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்களாக (ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) உள்ளது.

    இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி உறுதிமொழி அளித்துள்ளார்.

    அதவாது 18.5 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி) நன்கொடையாக வழங்க இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாக, பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் “எனது மனித நேய அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு சற்று காலம் ஆகும். ஆனால் நான் அதுவரை காத்திருக்க மாட்டேன். என்னிடம் இருப்பது காலியாகும் வரை நான் இதை தொடருவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

    மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    மலேசியாவில் வசிக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் தனது முன்னாள் மனைவியை கொலை செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் வாழும் அமெரிக்கரான ஜெரால்ட் வேய்ன் மைக்கேல்சன் என்ற 63 வயது முதியவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது புது மனைவியுடன் பிலிப்பைன்ஸ் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அப்போது அதனை எதிர்த்த அவரது முன்னாள் மனைவியை ஜெரால்ட் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வழக்கு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் ஜெரால்ட் குற்றவாளி என நீருபிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெரால்டின் வழக்கறிஞர் ராமு, ஜெரால்ட் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை எனவும், அவரை தாக்கிய முன்னாள் மனைவியிடம் இருந்து தற்காத்து கொள்ளும் முயற்சியில் அவர் இறந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் வழக்கறிஞர் ராமு தெரிவித்துள்ளார். #Malaysia
    இரண்டு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காத நிலையில் முன்னாள் மனைவி கோர்ட்டை நாடிய நிலையில், 24600 ரூபாயை முன்னாள் கனவர் சில்லரைகளாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
    சண்டிகர்:

    அரியானா ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இரு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காததால் அந்த பெண் கோர்ட்டை நாட,  2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. 

    இதையடுத்து அந்த வக்கீல் ரூ.24,600 ரூபாயை சில்லரையாகவும், மீதமுள்ள 400 ரூபாயை நூறு ரூபாய் நோட்டாகவும் மூட்டையில் கட்டி நீதிமன்றத்துக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என முறையிட்டார்.

    ‘ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தான் உத்தரவு. நோட்டாகதான் கொடுக்க வேண்டும் என்பது உத்தரவல்ல’ என வக்கீல் சட்டம் பேச வாக்குவாதம் வெடித்துள்ளது. பின்னர் ,அந்த வழக்கறிஞர் சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன் என்றும் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ×