search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex police officer"

    • ஆண்ட்ரியா உடற்பயிற்சிக்காக காலை சைக்கிளில் சென்றார்
    • "அவனை பின்புறமாக மோதி தாக்கு" என நண்பன் பதிலளிக்கிறான்

    அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி.

    இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா ப்ரோப் (Andreas Probst). இவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நான்கு நாட்களுக்கு முன் இவர் தனியாக காலை சுமார் 06:00 மணியளவில் தனது சைக்கிளில் உடற்பயிற்சிக்காக புறப்பட்டார். அவர் மேற்கு சென்டினியல் பார்க்வே (West Centennial Parkway) சாலையின் அருகில் வடக்கு டெனாயா சாலை (North Tenaya Way) சாலை வழியாக சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தார்.

    அப்போது சற்று தொலைவில் ஹுண்டாய் காரில் அமர்ந்திருந்த 18 வயதிற்குட்பட்ட ஒரு சிறுவன் நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டே "தயாரா?" என கேட்க, அவனது நண்பர்களில் ஒருவன் "ஆமாம், அவனை பின்புறமாக தாக்கு" என பதிலளிக்க, உடனே அந்த சிறுவன் காரை வேகமாக அந்த காவல் அதிகாரி ஓட்டி செல்லும் சைக்கிளின் பின்புறத்தில் இடிக்க, அவர் தூக்கி வீசப்பட்டார். காரில் இருந்த நண்பன் அந்த அதிகாரி தரையில் பரிதாபமாக கிடப்பதை படமாக்கி கொண்டான். காரில் உள்ள மற்றொரு நண்பன், "அவன் தொலைந்தான்" என கூற, அவர்கள் அங்கிருந்து விரைவாக தப்பி செல்கின்றனர்.

    அவ்வழியாக சென்றவர்கள் அடிபட்டவரை காப்பாற்ற அவசர சேவைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவ சேவையினர் அந்த காவல் அதிகாரியை யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த நிகழ்ச்சி முழுவதையும் தொடக்கம் முதலே படமெடுத்த அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் அந்த முழு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இறுதியாக, அந்த காரை ஓட்டிய சிறுவனையும், அவன் நண்பர்களையும் காவலில் எடுத்துள்ளனர்.

    அச்சிறுவனின் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் எதற்காக இந்த கொலையை செய்தனர் எனும் காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    கொலையை செய்யும் முன்பு, அதனை படமாக்கவும் திட்டமிட்டு, இரக்கமின்றி காரால் சைக்கிளை மோதிய அந்த சிறுவனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    மூளை புற்றுநோயால் உயிருக்கு போராடும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு அவரது மனைவி முறையான சிகிச்சை அளிக்கவில்லை என அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    சென்னையை அடுத்த ஆவடி பருத்திபட்டில் வசித்து வருபவர் சாம் பிரிய குமார் (59). போலீஸ் துறையில் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி வகித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓய்வுபெற்றார். பணியில் இருந்தபோது இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவருக்கு மூளை புற்றுநோய் இருப்பது மருத்துவரால் கண்டறியப்பட்டது. பல்வேறு கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நோயின் தீவிர தன்மை முற்றிலும் பரவியது. அவரது மனைவி ஜெயா மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

    இந்தநிலையில் சாம் பிரியகுமாரின் தங்கை ஷீலா எபிநேசர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறிஇருப்பதாவது:-

    நான் அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியில் வசித்து வருகிறேன். எனது சகோதரர் சாம் பிரியகுமார் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். அவரை மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து உதவி கமி‌ஷனர் சிவகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். திருமங்கலம் போலீசார் ஏ.டி.எஸ்.பி. வீட்டிற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில் ஏ.டி.எஸ்.பி. குடும்பத்திற்கும் புகார் கொடுத்துள்ள சகோதரி குடும்பத்துக்கும் 30 வருடமாக பேச்சுவார்த்தை கிடையாது என தெரியவந்தது. குடும்ப காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பிரச்சனையை இப்போது ஏற்படுத்தி வருவதாக ஏ.டி.எஸ்.பி. மனைவி ஜெயா தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும் போது, என் கணவரை காப்பாற்ற ஒரு மனைவிக்கு இல்லாத அக்கறையா? 30 வருடமாக பேசாத இவருக்கு திடீரென என் கணவர் மீது பாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. என் கணவர் உயிரை காப்பாற்ற போராடி வருகிறேன். மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். கடவுள் ஒருவரைத்தான் நம்பி இருக்கிறேன். அவர் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரால் நடக்க முடியாது. எல்லா பணிவிடைகளையும் அருகில் இருந்து நான் செய்து வருகிறேன் என்றார்.
    ×