search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-minister speech."

    • அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
    • முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் மீனவர் அணி ஒன்றிய செயலாளர் விசுவ நாதன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    மீனவர்கள் மற்றும் மீனவ சங்கத்தின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் மீன்பிடி பொது ஏல அறிவிப்பை கொண்டு வந்த தி.மு.க. அரசின் அறிவிப்பை நிறுத்தி வைப்பதற்கும், சட்டத்தின் மூலமாக மீன்பிடிக்கும் உரிமை மீனவர்கள் சங்கங்களுக்கே உரிமை உண்டு என்ற நிரந்தரமான நல்ல தீர்ப்பை பெறு வதற்கும் உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    மீனவர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் இயக்கம் அ.தி.மு.க.. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் இன்று மனம் மாறி இருக்கிறார்கள். ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கும் நேரம் இந்த நேரம்.

    வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையில் 40 இடமும் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தல் வரும்போது தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக எடப்பாடியார் தலைமையில் சட்டமன்றம் உருவாகும். இது எவராலும் மாற்றிகாட்ட முடியாது என்பதை மக்களே மாற்றி காட்டுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கி ன்றேன்.

    தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டு ள்ளது. இன்னும் சில மது கடைகள் மூட வேண்டும் என்பது மக்களின் கோரி க்கை. எந்த பகுதியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றா ர்களோ அந்த இடங்களில் மூடினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பர்கூர் உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித்து றையை பொறுத்தவரை ஆதி திராவிட நலத்துறை பழங்குடி பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி அனைத்தும் ஒன்றாக இணைக்கப்ப ட்டுள்ளது.

    அனைத்திற்கும் ஆசிரியர்கள் தேவை என்ற முறையில் அதை பூர்த்தி செய்வதாக சட்டமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்கள். இன்று வரை ஆசிரியர்கள் நிரப்பப் படவில்லை. அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் நிரப்பப் படவில்லை என்றாலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கலாம்.

    அதற்கு விதிமுறை இருக்கின்றது.ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் படித்து விட்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராள மானோர் உள்ளார்கள். அவர்களை கொண்டு எந்தெந்த பாடத்திற்கு தேவையான ஆசிரியர்களை நியமித்தால் மாணவர் களுக்கு சிறந்த கல்வியை தர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேவராஜ் வரவேற்றார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ். ஜி.சண்முகானந்தம் வாழ்த்துரை வழங்கினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மோகன் குமார் சிறப்புரை யாற்றினார்.

    ஒன்றிய செயலாளர் நாராயணன், அந்தியூர் நகரச்செயலாளர் டி.எஸ். மீனாட்சி சுந்தரம், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.பி.பழனிச்சாமி, நகர பேரவை செயலாளர் பாலுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் டி.கே.வி.ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் ராஜா சம்பத், அந்தியூர் தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ்,

    மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோணி, அத்தாணி பேரூராட்சி கவுன்சிலர் வேலு மருதமுத்து, ரமேஷ், கனகராஜ், 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் ஓட்டல் கிருஷ்ணன், சவுந்தர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமச்சந்திரன், துணைச்செயலாளர் எம்.எஸ்.சந்திரன்,

    சிறுபான்மை பிரிவு ஜான்சன், பிரம்மதேசம் நடராஜ், மீனவர் அணி நிர்வாகிகள் ராமர், மணி, மூர்த்தி, ராஜா, துரைசாமி, மணிகண்டன், சரவணன், பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர இளைஞரணி செயலாளர் பார்மோகன் நன்றி கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெறும். அ.தி.மு.க.வை தி.மு.க.வால் ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியுள்ளார்.
    • மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    மதுரை

    அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டம் மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவினை விமரிசையாக கொண்டாட மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். தமிழக அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. மக்களி டம் பொய்யான வாக்குறுதி களை அளித்து சொற்ப வாக்குகள் வித்தியா சத்தில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். இனி அ.தி.மு.க. தொண்டர்கள் தூங்கப் போவதில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றியை பெரும்.

    இதற்காக தமிழக மக்களும் தயாராக இருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடத்தை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புகட்டுவார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடியல் தர போகிறேன் என்றார். ஆனால் இப்போது அவருக்கே சரியாக விடியாமல் இருக்கிறது. மக்களுக்கு எப்படி அவரால் விடியல் கிடைக்கும். சர்வாதி காரியாக மாறுவேன் என்று கர்ஜித்த மு.க. ஸ்டாலின் தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்டிக்க துணிவு இல்லாமல் பம்மி வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. வீழ்ச்சி அடைந்து விட்டதாக மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அ.தி.மு.க.வை தி.மு.க.வால் ஒரு போதும் வீழ்த்த முடியாது. ஆட்சியில் இருந்ததை விட இப்போது பல மடங்கு பலமிக்க இயக்கமாக அ.தி.மு.க. உருவாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்ட ர்கள் அனைவரும் வீறு கொண்டு செயல்பட்டு வருகிறோம். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அத்தனை தேர்தல்களிலும் இனி அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. இதற்கு முன்னோட்டமாக கழக பொன்விழா மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை வெகு விமரி சையாக நாம் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

    ×