search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Essex"

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். #MuraliVijay
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் முரளி விஜய். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 3-வது டெஸ்டிற்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி முடிவு செய்தார். முதல் முறையாக கவுன்ட்டி போட்டியில் களம் இறங்கிய முரளி விஜய் முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் 56 ரன்களும், 2-வது இன்னிங்சில் சதம் (100) அடித்தும் அசத்தினார். 2-வது அட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்கெதிராக 85 ரன்கள் அடித்தார்.

    இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் சசக்ஸ் அணி சர்ரே அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சர்ரே 67 ரன்னில் சுருண்டது. பின்னர் சசக்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிரவுன் 2 ரன்னில் வெளியேறினார்.



    அடுத்து முரளி விஜய் உடன் வெஸ்லே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 127 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெஸ்லே 93 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எசக்ஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது.

    இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், கவுன்ட்டி போட்டியில் தொடர்ச்சியாக நான்கு முறை 50-க்கு மேல் ரன்குவித்து அசத்தி வருகிறார்.
    இங்கிலாந்து தொடரில் மோசமாக விளையாடிய முரளி விஜய், கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். #MuraliVijay
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என மோசமாக இழந்தது. முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். தொடக்க வீரரான இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அணியில் இருந்து நீக்கியதால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். அதன்படி எசக்ஸ் அணிக்காக விளையாடினார். எசக்ஸ் - நாட்டிங்காம்ஷைர் அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

    இதில் நாட்டிங்காம்ஷைர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. நாட்டிங்காம்ஷைர் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய எசக்ஸ் அணி 233 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முரளி விஜய் 56 ரன்கள் அடித்தார்.



    பின்னர் நாட்டிங்காம்ஷைர் 2-வது இன்னிங்சில் 337 ரன்கள் சேர்த்தது. இதனால் சசக்ஸ் அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடகக் வீரராக களம் இறங்கிய முரளி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 242 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் வெஸ்லேயும் (110 அவுட் இல்லை) சிறப்பாக விளையாட சசக்ஸ் அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் இடம் கிடைக்கும் என முரளி விஜய் நம்பிக்கையில் உள்ளார்.
    இந்தியா மற்றும் எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முரளி விஜய் 53 ரன்னிலும், விராட் கோலி 68 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களில் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 51 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 100.2 ஓவரில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    எசக்ஸ் அணி சார்பில் பால் வால்டர் 4 விக்கெட்டும், கோல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, எசக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் வெஸ்லி, பெப்பர் மற்றும் பால் வால்டர்  ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். இறுதியில் எசக்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து தனது முதல் இன்ன்னிங்சை முடித்துக் கொண்டது.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தவான் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா 23 ரன்களில் வெளியேறினார்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தனர், லோகேஷ் ராகுல் 36 ரன்னும், ரகானே 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்த பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
    ×