search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுன்ட்டி போட்டியில் அசத்தும் முரளி விஜய்- தொடர்ச்சியாக 50-க்கு மேல் ரன்குவிப்பு
    X

    கவுன்ட்டி போட்டியில் அசத்தும் முரளி விஜய்- தொடர்ச்சியாக 50-க்கு மேல் ரன்குவிப்பு

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். #MuraliVijay
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் முரளி விஜய். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 3-வது டெஸ்டிற்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி முடிவு செய்தார். முதல் முறையாக கவுன்ட்டி போட்டியில் களம் இறங்கிய முரளி விஜய் முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் 56 ரன்களும், 2-வது இன்னிங்சில் சதம் (100) அடித்தும் அசத்தினார். 2-வது அட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்கெதிராக 85 ரன்கள் அடித்தார்.

    இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் சசக்ஸ் அணி சர்ரே அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சர்ரே 67 ரன்னில் சுருண்டது. பின்னர் சசக்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிரவுன் 2 ரன்னில் வெளியேறினார்.



    அடுத்து முரளி விஜய் உடன் வெஸ்லே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 127 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெஸ்லே 93 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எசக்ஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது.

    இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், கவுன்ட்டி போட்டியில் தொடர்ச்சியாக நான்கு முறை 50-க்கு மேல் ரன்குவித்து அசத்தி வருகிறார்.
    Next Story
    ×