search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E.Seva Center"

    • சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
    • விண்ணப்பித்த பொதுமக்களுக்கான சான்றிதழ்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நெல்லை:

    பொதுமக்கள் பிறப்புச் சான்று, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை எளிமையாக பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாளை பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முயற்சியில் ஆயுதப்படை மைதானம் எதிரே அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இ- சேவை மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விண்ணப்பித்த பொதுமக்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த சேவை மையம் மூலம் பிறப்பு சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, விதவை சான்று உள்பட 31 வகையான சான்றிதழ்களுக்கு இங்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, கதிஜா இக்கலாம் பாஷிலா, கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், கந்தன், பேச்சியம்மாள், தச்சை பகுதி பொருளாளர் அய்யாசாமி பாண்டியன் மற்றும் வல்லநாடு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×