search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Fort Iswaran Temple"

    • அறுபத்து மூவர் விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இரவு ஒரே சப்பரத்தில் 63 எழுந்தருளி திருவிதி உலாவும் நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதி யில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் அறம் வளர்த்த நாயன்மார்களை போற்றும் வகையில் அறுபத்து மூவர் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதேபோல் நடப்பாண்டு அறுபத்து மூவர் விழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரமூர்த்தி, சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜையும், சிறப்பு வழிபாடும், ஏழாம் திருமுறை முற்றோதுதல் நடந்தது.

    வரும் 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகளிர் திருவிளக்கு வழிபாடும், 30-ந் தேதி தலவிருட்சம் வன்னியம்மன் மற்றும் வன்னிநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 31-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து 108 கலசத்தில் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட தீர்த்தம், பஞ்சாமிருதம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவிய ங்களில் 63நாயன்மார்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    அன்றைய தினம் இரவு ஒரே சப்பரத்தில் 63 எழுந்தருளி திருவிதி உலாவும் நடக்க உள்ளது.

    இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கயல்விழி, சரக ஆய்வர் தினேஷ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    • இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர் , 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேரோட்டம். குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

    இதில் விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணியிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்றவற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை யொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாக–சாலைகள் அமைக்கப்பட்டு ள்ளன.

    வருகிற 8-ந் தேதி காலை 10.35 மணி முதல் 11.35 மணிக்குள் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×