search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "empty pot woman strike"

    திண்டுக்கல் நகரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் இன்றும் காலி குடங்களுடன் மறியல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    கோடை காலத்தில் நிலவும் வறட்சியை போன்று தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தினசரி காலிகுடங்களுடன் மறியல், மாநகராட்சி முற்றுகை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இன்று 13, 14-வது வார்டுகளுக்குட்பட்ட ஒய்.எம்.ஆர். பட்டி, ஜோசப்காலனி பொதுமக்கள் காலி குடங்களுடன் கல்லறை தோட்டம் பகுதியில் அமர்ந்து மறியல் செய்தனர். 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரோட்டை மறித்து போராட்டம் செய்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த நகர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி புதியதாக பதித்து உள்ள ஜிக்கா பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. சோதனை ஓட்டம் என்று கூறி 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே எங்களுக்கு பழைய பைப்புகளிலேயே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதன்பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நெய்வேலியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே மாற்று குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பி-1 பிளாக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ச்கேட் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
    ×