search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Employement"

    காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு, சமூக நலத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

    எனவே காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வருகிற 23-ந்தேதி மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். #ESIHospital
    புதுடெல்லி:

    இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ், இ.எஸ்.ஐ. கழகம் எனப்படும் தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனமும், மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் தோறும் இதன் மருத்துவமனை கிளைகள் உள்ளன. தற்போது இந்த மருத்துவமனைகளில் ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தெலுங்கானா, பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 111 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பணியிடங்கள் விவரத்தையும், பணிப்பிரிவு வாரியான காலியிட விவரத்தையும் முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

    கல்வித்தகுதி

    பிளஸ்-2 படிப்புடன், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பார்மஸி பட்டப்படிப்பு படித்தவர்கள், அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

    வயது வரம்பு

    ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

    தேர்வு செய்யும் முறை


    ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    கட்டணம்

    விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

    விண்ணப்பிக்கும் முறை

    விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 21-ந் தேதியாகும். தமிழக விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esichennai.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். #ESIHospital
    தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழி கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

    ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

    மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் அரசு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவிதொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×