என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elderly died"
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அருகே உள்ள கூழபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 78). விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .
அங்கு ஏழுமலை சிகிச்சைபலனின்றி இறந்தார். இது குறித்து தூசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 75 மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த முதியவர் கருப்பு பச்சை நீலம் கலந்த டீ சர்ட் அணிந்திருந்தார். வேட்டியும் அணிந்து இருந்தார் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. முதியவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எட்டியலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). ராஜகோபால் தனது பேத்தி சாருமதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது மணக்கால் ஜீவா நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள், ராஜகோபால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகோபாலுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சாருமதிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த ராஜகோபால், சாருமதியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். சாருமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து குடவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சந்தான மேரி, ராஜா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்