search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussehra devotees"

    • காப்பு கட்டிய பின்னர், தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
    • சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பக்தர்கள் முதலில் கடலில் நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.

    தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய பின், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு என்பதை தங்களது வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    உடன்குடி, பரமன்குறிச்சி, சீர்காட்சி, தாண்டவன் காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டபத்து மற்றும் குலசேகரன் பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் திரும்பிய திசைகள் எல்லாம் தசரா பக்தர்கள் வீதி,வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்யும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை 10-ம் திருநாளான வருகின்ற 24-ந் தேதி கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு குலசேகரன் பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹார காட்சி நடைபெறும். மறுநாள் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.

    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.
    • தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.

    உடன்குடி:

    குகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பல லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா விற்காக பல்வேறு பணிகள் தற்போது தொடங்கப்ப ட்டுள்ளது,

    குலசேகரன்பட்டினத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டு களுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.

    இதுகுறித்து நெடு ஞ்சாலைத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் முறையான பதிலளிக்கப்பட வில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் ஆக்கிர மிப்புகள் அகற்று வதற்காக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் வந்தனர். அப்போது வீடு கட்டி குடியிருந்த குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே குலசேகரன்பட்டினம் போலீ சார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனையடுத்து பல ஆண்டுகளாக நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமாக ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறும் போது பலலட்சம் கூடும்தசரா பக்தர்களுக்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதுவும் விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
    • சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான குரங்கு,கரடி போன்ற மிருகங்கள் வேடங்களையும், சின்ன சின்ன குழந்தைகள் சுவாமி வேடங்களும் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.

    திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.

    தற்போது கோவிலில் கொடி ஏறியதும் பக்தர்கள் கோவிலுக்கு வந்துள் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி அதை வலது கையில் கட்டி தனக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    இதில் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான குரங்கு,கரடி போன்ற மிருகங்கள் வேடங்களையும், சின்ன சின்ன குழந்தைகள் சுவாமி வேடங்களும் அணிந்து காணிக்கைவசூல் செய்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்யும் அனைவரும் வருகின்ற அக்டோபர் மாதம் 5-ந்தேதி 10-ம்திருநாள் அன்று தாங்கள் வசூலித்த காணிக்கையை கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்காக கோவிலை சுற்றி நிரந்தர உண்டியல் தவிர தற்காலிக உண்டியல் 100க்கு மேற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    ×