என் மலர்
நீங்கள் தேடியது "Drug awareness camp"
- உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
- கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக உசிலம்பட்டி மதுரை ரோட்டில் தனியார் மகாலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மற்றும் கஞ்சா தொழில் செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனவும், கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உசிலம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.
- போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனிதனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பின் பாதிப்பால் நினைவாற்றல் குறைகிறது
- .போதை பொருள்களை உபயோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்களை பற்றி தகவலறிந்தால் காவல் துறையினரிடமோ, பள்ளி அலுவலகத்திலோ தகவலளிக்க மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
திருச்சி :
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளியின் சேர்மன் கார்த்திகேயன் முன்னிலையில், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனிதனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பின் பாதிப்பால் நினைவாற்றல் குறைகிறது எனவும், குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின், புகையிலை, சிகரெட் போன்றவைகளால் வரும் தீமைகளை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
போதைப்பொருள்களில் சேர்க்கப்படும் கொடின் வகை மருந்துகளால் நரம்பு மண்டல பாதிப்புகள், மதுவினால் சிரோசில் எனும் கல்லீரல் பிரச்சனைகள், சிகரெட்டில் உள்ள நிகோடினால் நுரையீரல் பாதிப்புகளை பள்ளியின் சேர்மன் கார்த்திகேயன் உரையாற்றினார். போதைப் பொருள்களால் வரும் தீமைகளான, இதயம், நரம்பு மண்டல பாதிப்புகள், தொடர் பழக்கத்தால் அறிவாரந்த செயல்களில் பாதிப்பு, மனக் கட்டுப்பாட்டை தளர்த்துதல், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய தூண்டுதல்,
மற்றும் அவைகளை உபயோகப்படுத்தும் பட்சத்தில், எதிர்கால சீரழிவும், சமுதாயத்தில் குடும்பத்திற்கு ஏற்படும் அவப்பெயரும் விரிவாக மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.போதை பொருள்களை உபயோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்களை பற்றி தகவலறிந்தால் காவல் துறையினரிடமோ, பள்ளி அலுவலகத்திலோ தகவலளிக்க அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருள்களுக்கெதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முகாமில் பள்ளியின் இயக்குனர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியை ரீனா உமாசங்கர், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.






