என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Draupathi Amman"
- அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
- பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நேற்று பிற்பகல் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. வருகின்ற ஜூலை 3-ம் தேதி கரகத் திருவிழாவும், 4-ம் தேதி பக்காசூரனுக்கு சோறு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 5-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் திரவுபதி-அர்ச்சுனன் சாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
6-ம் தேதி அர்சுனன் தபசு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் ஜூலை
7-ம் தேதி மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- சோழவந்தானில் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் பிரசித்திபெற்ற திருவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வார்டு கவுன்சிலர் குருசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
இன்று மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நாளை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்