search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான்: திரவுபதி அம்மன் கோவில் திருக்கல்யாணம்
    X

    திருக்கல்யாணம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சோழவந்தான்: திரவுபதி அம்மன் கோவில் திருக்கல்யாணம்

    • சோழவந்தானில் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பிரசித்திபெற்ற திருவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வார்டு கவுன்சிலர் குருசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.

    இன்று மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நாளை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×