search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr. Sivanthi Aditanar College of Education"

    • பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் 28-ம் ஆண்டு பயின்றோர் கழக விழா நடந்தது. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஆல்வின் வரவேற்று பேசினார். பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    கல்லூரி முன்னாள் மாணவியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி உயிரியல் துறை உதவி பேராசிரியையுமான காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கலை மற்றும் நடன உதவி பேராசிரியை சுஜாவதி மற்றும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பயின்றோர் கழக பேரவை செயலாளர் தேவதாசன் பூமன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்களாக ஆல்வின், உமா செயலாற்றினர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.
    • மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) வழிகாட்டல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி-பிளஸ்' சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

    இளங்கலை கல்வியியல் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல், பொருளறிவியல், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம், கணினி அறிவியல், பொருளறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    சிறப்பு அம்சங்கள்

    பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல், கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) வழிகாட்டல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    மாணவர் சேர்க்கை

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் குறைவான இடங்களே உள்ளன. எனவே பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
    • மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி' பிளஸ் சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

    இளங்கலை கல்வியியலில் (பி.எட்.) ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், செடி உயிரியல், உயிர் தொழில்நுட்பம்), பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் இயற்பியல், பயன்பாட்டு வேதியியல்), வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம் மற்றும் பொருளறிவியல் பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவர்.

    திறமை வாய்ந்த பேராசிரியர் குழு

    பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    வளாகத் தேர்வு

    மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) பயிற்சியும், ஆராய்ச்சி கல்விக்கான (NET) பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

    ×