search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doves"

    • முருகலெட்சுமி தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.
    • நேற்று அதிகாலை மர்ம நபர் யாரோ 12 புறாக்களையும் திருடிச்சென்றுள்ளார்.

    நெல்லை:

    சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்தை அடுத்த ராமசாமியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி முருகலெட்சுமி. இவர் தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதில் அடைக்கப்பட்டிருந்த 12 புறாக்கள் நேற்று அதிகாலை மாயமானது. அதனை மர்ம நபர் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக முருகலெட்சுமி சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தில் வசிக்கும் கணேசன் மகன் மகேஷ்குமார்(வயது 19) என்பவர் புறாக்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×