என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog Atrocity"

    • மையவாடியில் தேவலோக தெருவில் பெரிய வாசலும், கிருபாகரன் தெரு முடிவில் ஒரு வாசலும் உள்ளது.
    • பேட்டை 18, 19, மற்றும் 20-வது வார்டுகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    8 ஜமாத்தார்கள் மனு

    பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் 8 ஜமாத்தார்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாளை மண்டலம் 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் தேவலோக தெருவின் முடிவில் மையவாடி அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த பகுதியானது அடக்க ஸ்தலமாக கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக மையவாடியில் தேவலோக தெருவில் பெரிய வாசலும், கிருபாகரன் தெரு முடிவில் ஒரு வாசலும் உள்ளது. இந்த பகுதியில் 10 அடி அகலத்தில் பொது நடைபாதை இருந்தது. தற்போது அதனை ஆக்கிரமித்து விட்டனர். இதனால் அந்த வழியாக பிரேதத்தை ஊர்வலமாக எடுத்து செல்ல ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளது. நாங்கள் வாய்மொழியாக அவர்களிடம் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    நாய் தொல்லை

    எஸ்.டி.பி ஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் முகம்மது அசனார், வார்டு நிர்வாகி ரசூல் ஆகியோர் துணை மேயர் ராஜுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை அடுத்த பேட்டை 18, 19, மற்றும் 20-வது வார்டுகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. முகமது நயினார் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை அந்த பகுதியில் உலாவி வரும் வெறிநாய் ஒன்று கடித்து விட்டது. இதன் காரணமாக பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக 6 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஹ்மான் பேட்டை பகுதியில் வீதியில் சுற்றி திரிந்த 6-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கடித்துள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி நெல்லை பேட்டை பகுதியில் பொது மக்களின் உயிருக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க சுகாதார துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×