என் மலர்
நீங்கள் தேடியது "DMK Candidates list"
திமுக வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந்தேதி வெளியாகும். அதேநாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #ParliamentElection #DMK #MKStalin
சென்னை:
தி.மு.க. கூட்டணி தொகுதிகளை அறிவித்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்காக மத்திய, மாநில அரசு தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த தோழமை பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
இந்த கூட்டணி உருவானது பேரத்தின் அடிப்படையிலானது அல்ல. கொள்கையின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந்தேதி வெளியாகும். அதேநாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு விசாரிக்க வேண்டும்.
ஆனால் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் எனது மருமகன் சபரீசன் மீதும், என் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாக சந்திக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.
தேர்தல் கமிஷன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. எங்களை பொறுத்தவரை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இதற்காக நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் 2 வார அவகாசம் வாங்கி உள்ளனர். பொறுத்து இருந்து பார்ப்போம்
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் ஒரே மேடையில் பங்கேற்றோம். அதுபோல் இனிவரும் பிரசாரக்கூட்டங்களிலும் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கி உள்ளோம். அத்துடன் பாராளுமன்ற மேல்-சபையிலும் ஒரு எம்.பி.பதவி வழங்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.
பேட்டியின்போது கூட்டணி கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்தனர். #ParliamentElection #DMK #MKStalin
தி.மு.க. கூட்டணி தொகுதிகளை அறிவித்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்காக மத்திய, மாநில அரசு தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த தோழமை பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
இந்த கூட்டணி உருவானது பேரத்தின் அடிப்படையிலானது அல்ல. கொள்கையின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந்தேதி வெளியாகும். அதேநாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்.
தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு தனியாகவும், சட்டசபை இடைத்தேர்தலுக்கு தனியாகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு விசாரிக்க வேண்டும்.
ஆனால் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் எனது மருமகன் சபரீசன் மீதும், என் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாக சந்திக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.
தேர்தல் கமிஷன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. எங்களை பொறுத்தவரை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இதற்காக நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் 2 வார அவகாசம் வாங்கி உள்ளனர். பொறுத்து இருந்து பார்ப்போம்
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் ஒரே மேடையில் பங்கேற்றோம். அதுபோல் இனிவரும் பிரசாரக்கூட்டங்களிலும் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கி உள்ளோம். அத்துடன் பாராளுமன்ற மேல்-சபையிலும் ஒரு எம்.பி.பதவி வழங்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.
பேட்டியின்போது கூட்டணி கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்தனர். #ParliamentElection #DMK #MKStalin






