என் மலர்
நீங்கள் தேடியது "DMK A group of activists"
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்க அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சவுந்தர் அவைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற 20-ந்தேதி மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
26-ந்தேதி நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகிய பணிகளை செய்ய வேண்டும். வரும் 27-ந் தேதி திமுக கழக இளைஞர் அணி செயலாளர் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.இ.போர் பாபு, பிரகாஷ், பொருளாளர் பாலன் மாவட்ட பிரதிநிதிகள் என்.ராமலிங்கம், மூர்த்தி, குப்புசாமி, மற்றும் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முடிவில் இணைச் செயலாளர் பூஷனா கன்னியப்பன் நன்றி கூறினார்.
- முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
- தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மாநில இளைஞரணி மாநாட்டிற்கு முன்னோட் டமாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
இதனை சிறப்பாக நடத்திட வேண்டி வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் மத்திய மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பகுதி, ஒன்றியங்களுக்கு நேரில் வந்து அந்தந்த பகுதி ஒன்றியங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளோம்,
அதன்படி 14-ந் தேதி காலை 9.30 மணி பொன்னம்மாப்பேட்டை பகுதி, 10.30 மணி அரிசிபாளையம் பகுதி, 11.30 மணி அம்மாப்பேட்டை பகுதி, 12.30 கிச்சிப்பாளையம் பகுதி, மதியம் 1.30 மணி குகை பகுதி, 4.30 தாதகாப்பட்டி பகுதி, 5.30 மணி கொண்டலாம்பட்டி பகுதி, 6.30 மணி செவ்வாய்ப்பேட்டை பகுதி, 7.30 மணி குமாரசாமிப்பட்டி பகுதியிலும் நடக்கிறது.
15-ந் தேதி 9.30 மணி அஸ்தம்பட்டி பகுதி, 10.30 அழகாபுரம் பகுதி, 11.30 மணி மெய்யனூர் பகுதி, 12.30 மணி சூரமங்கலம் பகுதி, 1 மணி சேலம் வடக்கு ஒன்றியம், 3 மணி தாரமங்கலம் கிழக்கு மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றியம், 4 மணி ஓமலூர் வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியம், 5 மணி காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
இதில் தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.






