என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Djocovic"

    • 6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா?
    • இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-4ம் நிலை வீரரான ஜோகோவிச் ( செர்பியா ) மோதுகிறார்கள்.

    6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான அவர் தற்போது தான் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். கடந்த ஆண்டு அல்காரஸ் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 8-வது தடவையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.

    38 வயதான ஜோகோவிச் 25-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளரான அவர், கடைசியாக 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த கிராண்ட்சிலாமும் பெறவில்லை.

    5 கிராண்ட் சிலாம் போட்டிக்கு பிறகு ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் 38-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 தடவை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்)-ஐந்தாவது வரிசையில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள்.

    சபலென்கா 5-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறார். ரைபகினா முதல் கிராண்ட் சிலாம் பட்டத்துக்கு காத்திருக்கிறார்.

    இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் ஒரு போட்டியில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர்- அலியாசிம்மை, ஸ்பெயின் வீரர் நடால் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் ஃபெலிக்ஸ் ஆகரை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன்மூலம் காலிறுதி போட்டியில் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொள்கிறார்.

    இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.

    ஏற்கனவே 13 முறை பிரெஞ்ச் ஓபன் தொடரை வென்ற நடால், ஜோகோவிச்சை எதிர்கொள்ளும்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×