search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Thieves"

    • திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
    • கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு துணி, பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி செல்வர். பண்டிகை காலங்களில் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் சில நாட்களாக திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம் , காதர் பேட்டை உட்பட மாநகரின் பிரதான ரோடு, முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் தற்காலிக துணிக்கடைகள், பலகார கடைகள், பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தவும் உள்ளனர்.தற்போது இருந்தே மக்கள் கூடும் இடங்கள், பஸ்களில் வழிப்பறி திருடர்கள், பிக்பாக்கெட் ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மப்டியில் ரோந்து சென்று வருகின்றனர்.

    ×