என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி திருடர்கள்: வியாபாரிகள்-பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
- திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
- கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர்.
திருப்பூர்:
திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு துணி, பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி செல்வர். பண்டிகை காலங்களில் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் சில நாட்களாக திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம் , காதர் பேட்டை உட்பட மாநகரின் பிரதான ரோடு, முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் தற்காலிக துணிக்கடைகள், பலகார கடைகள், பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தவும் உள்ளனர்.தற்போது இருந்தே மக்கள் கூடும் இடங்கள், பஸ்களில் வழிப்பறி திருடர்கள், பிக்பாக்கெட் ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மப்டியில் ரோந்து சென்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்