என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divine Mysteries"

    • முருகரையும், வள்ளியையும் வழிபட கணவனின் அன்பும், அனுசரணையும் பெருகும்
    • உயர் பதவிகள் கிடைக்க திருவண்ணாமலையாரை வழிபடலாம்.

    * சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன், பொன், பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றிவிடுவார்

    * கணவன் அன்பாக நடந்துகொள்ள விசாக நட்சத்திரத்தில் மனைவியானவள் விரதம் இருந்து முருகரையும், வள்ளியையும் வழிபட கணவனின் அன்பும், அனுசரணையும் பெருகும் திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வரன்கள் அமையவும் இதை செய்யலாம்.

    * நீண்டகால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம் மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்ரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்தெடுக்கலாம்.

    * எதிரிகளை வெற்றிகொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியங்களில் இருந்து விடுபட பரிகாரங்களை அவிட்டம் நட்சத்திரத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவிகள் கிடைக்க திருவண்ணாமலையாரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

    * முக்கியமான காரியங்களுக்காக வெளியில் செல்லும்போது மஞ்சள் தூள் அல்லது விரலி மஞ்சள் கட்டையை எடுத்துச்செல்லும்போது போகிற காரியம் தடையில்லாமல் நல்லது நடக்கும்.

    * நோய் வந்து அவதிப்படுபவர்கள் ஒரு சிறிய மண் சட்டியில் ஒரு மஞ்சள் லட்டு, ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்ப்பட்டவரின் தலையை 8 முறை வலதுபுறமாக மட்டும் சுற்றி அதனை நான்கு முக்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மதியம் 12 மணிக்கு போட்டுவிட நோய்கள் விலகும்.

    * வேலை, இண்டர்வியூ, புதிய தொழில் முயற்சி, எந்த முயற்சி தொடங்கும் முன் சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்றுமுறை வலதுபுறமாக பாசிபயறை சுற்றினால் போல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை எடுத்து பறவைகளுக்கு கொடுக்க வேண்டும். இது வெற்றியை தேடித்தரும்.

    * திருவோணம் நட்சத்திரம் அன்று விஷ்ணு கோவிலுக்கு சென்று துளசி மாலை போட்டு துவரம்பருப்பு பாயாசம் சாமிக்கு நெய்வேத்தியம் செய்து தானம் அளிக்க நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

    * தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வந்தால் பணவருவாய் அதிகரிக்கும்.

    * திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவனை வணங்கிவிட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பலவருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.

    * வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

    * பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டுவிட்டு பின்னர் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.

    ×