search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster Recovery Rehearsal"

    • வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை கால கட்டத்தில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாளை தீயணைப்புத்துறை சார்பில் பாளையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    பேரிடர் மீட்பு

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் பேரிடர் மீட்பு குறித்து விளக்க உரையாற்றினார்.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். தீய ணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பிளாஸ்டிக், தேங்காய் மட்டை, கியாஸ் சிலிண்டர், தண்ணீர் கேன்கள், தெர்மாகோல் உள்ளிட்டவை மூலமாக வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை ஒத்திகையாகவும் தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ஒத்திகை

    வெள்ளத்தில் சிக்கி கொண்ட கர்ப்பிணிகள், முதியோர்களை பாது காப்பாக மீட்பது எப்படி?, தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருவதற்கு முன்பாக என்னென்ன சாதனங்களை பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து மீண்டு வரலாம் என்பது போன்ற மீட்பு ஒத்திகையை மாணவிகளுக்கு தீயணைப்பு துறை அலுவலர்கள் செய்து காண்பித்தனர்.

    அதேபோன்று விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் திடீர் உடல்நல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்தும் செயல்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துக்கூறினர். இதுதவிர தீயணைப்பு மீட்பு துறை சார்பில் அவசர கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள் குறித்தும் எடுத்து கூறினர்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் வருவாய் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் தலைமை தாங்கினார். குளத்தில் சிக்கி ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் சென்று மீட்டு வருவது போன்றும் ஒத்திகை காண்பித்தனர்.

    தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் அந்தோணி, சுந்தரகுருசாமி, மாவட்ட கலால் உதவி ஆணையர் சிவகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் ராமதாஸ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், சிவகாசி சுகாதாரத்துறை இயக்குநர் கலுசிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர். 

    ×