search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanya"

    • சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    • 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    ஆவடி வட்டம், மோரை பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் -சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.

    தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

    அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8.2.2023 அன்று 2-வது முறையாக முக சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

    அதன் தொடர்ச்சியாக சிறுமி தானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

    அப்போது சா.மு.நாசர் எம்.எல்.ஏ. மற்றும் சிறுமி தானியாவின் பெற்றோர் உடன் இருந்தனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பா. இரு சம்மாளுக்கும், தீயணைப்போர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி தானியாவுக்கு 2 கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    • ஆவடி பட்டாபிராம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி தானியா வீட்டுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    சென்னை:

    ஆவடியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சவுபாக்கியா. இவர்களது மூத்த மகள் சிறுமி தானியா (வயது 9) முக சிதைவு நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆவடி நாசரை தொடர்பு கொண்டு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி தானியாவுக்கு 2 கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்று ஆவடி பட்டாபிராம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி தானியா வீட்டுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, நாசர் ஆகியோர் உடன் சென்றனர்.

    • பல ஆவணப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் லீனா மணிமேகலை.
    • இவர் இயக்கத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து செங்கடல், மாடத்தி போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அண்மையில் இவர் இயக்கிய 'காளி' என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    லீனா மணிமேகலை

    இந்நிலையில், லீனா மணிமேகலை அடுத்து 'தன்யா' என்ற படத்தை இயக்கவுள்ளார். மலையாள நடிகை பார்வதி நடிக்கும் இப்படத்தை அபூர்வ பக்‌ஷி, மோனிஷா தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படம் சைபர் கிரைம் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

    இலங்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ‘18.05.2009’ படத்தின் விமர்சனம்.
    இலங்கையில் ஒரு தம்பதினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம் போராட்டம் குறித்து பேசுகிறார்கள்.

    அப்போது, தன்யாவின் தங்கை இயக்கத்தில் சேர ஆசைப்படுகிறாள். இயக்கத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். அதன்படி, கல்லூரி படிப்பை முடித்தவுடன் இயக்கத்தில் சேருகிறார். அப்போது தன்யாவும் இயக்கத்தில் சேருகிறார்.

    இயக்கத்தில் நிறைய செயல்களில் தன்யா ஈடுபடுவதாலும் துறுதுறுவென இருப்பதாலும், அவரை செய்தி வாசிப்பாளராக நியமிக்கிறார்கள். இவர்களின் இயக்கத்தை சேர்ந்தவரை தன்யா காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இந்த சமயத்தில் இலங்கை ராணுவம் அங்கிருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. 

    இதனால், தன்யாவின் வாழ்க்கை சூழல் மாறுகிறது. இதன் பின் இவரின் வாழ்க்கை எப்படி மாறியது. என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.



    நாயகியாக நடித்திருக்கும் தன்யாவை சுற்றியே இப்படம் நகர்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் இவரின் ரசிக்க வைக்கிறது. 

    இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை மிகவும் தைரியமாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கணேசன். இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் படத்தை எப்படி கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள். 



    இசைஞானி இளையராஜா இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். பார்த்திபன், சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு படத்தின் திரை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘18.05.2009’ உண்மைச் சம்பவம்.
    18.5.2009 படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் தன்யாவிற்கு மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    ‘18.5.2009’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக தன்யா ரபியா பானு நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    மர்ம நபர் நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார். இதுதொடர்பாக, நடிகை தன்யா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



    இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகைக்கு மர்ம நபர் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    ×